Tuesday, September 10, 2013

ஆளுயரக் கண்ணாடி

அனைத்துக்
கண்ணாடிகளும்
உண்மையைப்
பேசுவதில்லை

எல்லா
நேரமும்
அழகாய்க்
காட்டுகிற
கண்ணாடிகள்
நிச்சயமாய்ப்
பொய்
நிறைந்தவைதான்.

அழுக்குகள்
அடுக்கிய
கிடங்கோடு
இருக்கிற
மனசை
அழகாய்க்
காட்டுகிற
கண்ணாடிகள்
சதி
நிரம்பியவை

மீண்டும்
மீண்டும்
அழுக்கை
மறைத்து
அழகை
காட்டிய
படி
நிற்கின்ற
மனிதனுக்கு
காத்திருக்கிறது
கண்ணாடியின்
கொலைக்கார
அவதாரம்

இறப்புச் செய்தி I

கடவுள்
இறந்துவிட்டார்
செய்தி
ஊரெங்கும்
பரவியது

தட்டுத்
தடுமாறி
சேர்ந்தது
கூட்டம்

வழக்கம்
போல்
கடவுளின்
இறப்புக்
குறித்து
ஆளுக்கொரு
கதையளந்தார்கள்

கடவுள்
இறந்ததைக்
கண்டு
சிலர்
முகநூலிலும்
டிவிட்டரிலும்
துக்கம்
அனுசரித்தனர்.

மதுக்கடைக்களில்
மதுக்கள்
இலவசமாய்
வழங்கப்பட்டது

இன்றோடு
பாவக்
கணக்கு
தீர்ந்ததாய்ச்
சிலாகித்தனர்
சிலர்.

இறைச்
சன்னிதிகளுக்கு
கூட்டம்
குறைவதைத்
துக்கமாக
அறிவித்தது
உலகச்
செய்திகள்

மதங்கள்
மெல்ல
மதமிழப்பதை
உறுதிசெய்தன
மதங்கள்

தம்
மதத்தில்
மட்டுமே
கடவுள்
இருக்கிறாரென
கொக்கரித்தவர்கள்
பதுங்கியே
நின்றனர்

உலகம்
கடவுளின்றி
அப்படியே
இருந்தது
பழைய
பாவங்களுடன்

இருளில்

இருட்டைத்
தவிர
ஒவ்வாது
உனக்கும்
எனக்கும்


சுகம்
தர
நீ
சுகித்திட
நான்
மாற்றி
மாற்றி
நேர்க்கோட்டில்
இருவரும்


புதைந்திட்டப்
பிறகு
விடுவிக்க
புலன்கள்
பெருமூச்சின்
இடைவெளி
கடந்து

கலவியின்
தடங்களின்றி
விரைந்து
விடுவித்து

மீண்டும்
நானாகி
கணவானகிறேன்
மனைவிக்கு.....

அக்கம் பக்கம்