Monday, June 3, 2013

விருப்பங்களின்றி
தேர்வுக்குப்
படித்தேன்
நூட்களை
வாஞ்சையோடு
உனை
தினமும்
படிக்கிறேன்
இன்னும்
முடிக்கவில்லை

நீ -3

வலிகளின்
வழியில்
நிறைந்திருக்கும்
வெம்மையினை
தாளாது
தவிக்கிறது
.............

நீ -2

கல்லாதவர் கண்கள் புண்ணென்று சொன்னார்-உனைக்
காணாத கண்களும் புண்ணென்று சொல்வேன் - உன்
கண் முன்னே நான் எங்கே வெல்வேன்-அழகாய் உனைப் 
படைத்தவனை நிச்சயமாய் கொல்வேன்

நீ -1

அன்பிற்கான அத்தனை வாயிலையும் அடைத்தே வைக்கிறாய்-
எனை நிராகரிக்கும் அத்தனை தருணங்களிலும் உடைத்தே நொறுக்கிறாய்.

மீ

அழுகின்ற
காதலுக்குப்
புரியாது
வாய்
பேசும்
மொழியொன்றும்
அறியாது

ஊமைபோன்ற
உறவிது
தேவையில்லா
பிரிவிது

தூங்கி
போன
சூரியன்
அழுதாலும்
வாராது.
வீங்கி
போன
இதயமிங்கு
நீயின்றி
வாழாது.

வெகுதூரம்
நீ
நடந்தாய்,
காற்றாகி
திசையெல்லாம்
கடந்தாய்.

மீட்டெடுத்த
காதல்
நீ,
பூட்டிவைத்த
சாதல்
தீ,
போட்டிவைத்து
நான்
ஜெயிக்க
நீ
எட்டா
மீ

அக்கம் பக்கம்